tag:blogger.com,1999:blog-33853829969830837252024-03-12T18:17:12.886-07:00முகுள்முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-33238866644372570352010-06-20T09:19:00.000-07:002010-06-20T09:20:51.353-07:00...‘பெண்’ என்று உணர்ந்தேன்...உலக்கை போட்டு<br />ஒதுக்கிய நாளில்தான் – நான்<br />‘பெண்’ என்று உணர்ந்தேன்<br /><br />தம்பியைத் தொடுவதும்<br />தப்பென்றானது.<br /><br />அப்பா முகம் கூட<br />அடுக்களைக் <br />கதவிடுக்கில்தான் தெரிந்தது.<br /><br />நிமிர்ந்து நடப்பதும்<br />நேர் கொண்டு பார்ப்பதும்<br />உரக்கச் சிரிப்பதும்<br />உருண்டு படுப்பதும் <br />இனி கூடாதென்றாள்<br />போன தலைமுறைக் கிழவி!<br /><br />பள்ளிச் சீருடை <br />குதிகால் மறைத்தது.<br />பாவாடை தாவணிக்குள் -என்<br />பால்யம் மறைந்தது.<br /><br />அம்மா மடிக்கு நெருப்பானேன்<br />அப்பா மனசுக்கு சுமையானேன்.<br /><br />ஆக்கர் விட்டு - நான் <br />பம்பரம் ஆடிய வாசல்,<br />நொண்டி அடித்து – நான்<br />பாண்டி ஆடிய வாசல்,<br />முட்டிக்கால் மண்ணில் பதித்து –நான்<br />கோலிக்குண்டடித்த வாசல் <br />இப்போது..,<br />கோலம் பழகும் இடமானது.<br /><br />வீட்டுப்பாட நோட்டில்<br />சமையல் குறிப்பும் – வீட்டுக் குறிப்பும்<br />இடம் பிடித்தது.<br /><br />விவரம் அறிந்தேன்<br />வெகுளித்தனம் மறந்தேன் – என்<br />பெயர் சொல்லி அழைத்தாலும்<br />வெட்கப்பட்டேன்.<br /><br />உலக்கை போட்டு<br />ஒதுக்கிய நாளில்தான் – நான்<br />‘பெண்’ என்று உணர்ந்தேன்முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-38452909919977641172010-05-29T08:27:00.000-07:002010-05-29T08:34:17.049-07:00உறவுகள்ஆராரோ பாடி<br />அள்ளி எடுத்து அணைத்துக் கொஞ்சி<br />மூக்கைப் பிடித்து சங்கு புகட்டி<br />முழங்காலில் கிடத்தி <br />எண்ணெய்க் குளியல் நடத்தி<br />சாம்பிராணிப் புகையிட்டு<br />கருமையில் பொட்டிட்டு<br />தூளியில் ஆடவிட்டு<br />தூங்கவைக்க அம்மச்சி வேணும்<br /><br />தத்தித் தாவும்போதும்<br />தரையில் உருளும் போதும்<br />சுவர் பிடித்து நடந்து பழகி<br />சுளுக்கு விழுந்து புரளும்போதும்<br />பந்து உருட்டி ஆடும் போதும்<br />பாட்டுப்பாடி குதிக்கும் போதும்<br />மழலையில் உளறும் போதும்<br />மண்ணை அள்ளித் திண்ணும் போதும்<br />கைதட்டி ரசிக்கவும்<br />யானை அம்பாரி தூக்கவும்<br />தாத்தா வேணும்<br /><br />ஊருலா தூக்கிச் சென்று<br />குச்சிஐஸ் வாங்கித் தந்து<br />குட்டிக்கர்ணம் சொல்லித் தந்து<br />குள்ளமாய் நடந்து காட்டி<br />குமிழ்குமிழாய் சிரிப்பு காட்டி<br />குட்டித் தொப்புளில் ,<br />வாய் வைத்து சத்தமெழுப்பி<br />என் விரலில் சிக்கிய முடியை<br />சிணுங்கிச் சிணுங்கி மீட்டெடுத்து<br />தூங்கும் போது எனை ரசித்து<br />மற்ற நேரம் அழ வைத்து<br />உலகையே விலை பேசி<br />எனக்காக அதை வாங்க<br />தாய்மாமன் வேணும்<br /><br />பாலுக்கு அழும்போதெல்லாம்<br />அம்மாவை எழுப்பி<br />வெற்றிலை வாயோடு <br />முத்தவரும் பாட்டியை <br />முறைத்து ஒதுக்கி<br />வட்டிலில் சோறெடுத்து<br />வட்ட நிலா சுட்டிக்காட்டி<br />மசித்து மசித்து வாயில் திணித்து<br />உடை உடுத்தி அலங்கரித்து<br />அக்கறையாய் கவனித்து <br />பெறாமல் பெற்ற பிள்ளையாய்<br />சீராட்டி வளர்க்க <br />சித்தி வேணும்<br /><br />என் அப்பாவைக் காதலித்ததால்<br /><br />அத்தனை உறவுகளையும்<br />இழந்தது <br /><br />நீ மட்டுமல்ல...<br /><br />நானும்தான் அம்மா!முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-15421054465341250292010-03-21T01:11:00.000-07:002010-03-21T01:14:36.368-07:00அடுப்படி அவஸ்தைவெங்காயம் அரியும்போது<br />கண்கள் எரிந்தும்<br />கண்ணீர் வரவில்லை.<br /><br />கறிகாய் நறுக்கும்போது<br />கையையும் நறுக்கி<br />இரத்தம் வடிந்தும்<br />கண்ணீர் வரவில்லை.<br /><br />தேங்காய் உடைக்கும்போது<br />கீரல்களுக்கிடையே மாட்டிய விரல்<br />வீங்கியபோதும் <br />கண்ணீர் வரவில்லை.<br /><br /><br />ஈரக் கையால் <br />மிக்சியைத் தொட்டு<br />மசாலா அரைக்கும்போது<br />ஷாக் அடித்தும்<br />கண்ணீர் வரவில்லை.<br /><br />கொதிக்கும் குழம்பை<br />ருசிபார்த்த போது<br />நாக்கு வெந்தும்<br />கண்ணீர் வரவில்லை.<br /><br />இத்தனை <br />அடுப்படி அவஸ்தைகளையும்<br />ஓரங்கட்டி,<br />பார்த்துப் பார்த்துச்<br />சமைத்த உணவை<br />ருசிக்காமல் – <br />விமர்சிக்காமல்<br /><br />டிவி பார்த்துக் கொண்டே<br />விழுங்கினீர்களே!<br /><br />அப்போது<br />வடிந்தது கண்ணீர்,<br /><br />மனதிலிருந்து!முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-74702518489126538872010-03-17T23:49:00.000-07:002010-03-18T00:12:09.656-07:00ஒரே ஒரு முறைஆயிரம் முறை<br />கனவில் வரும் கருவே!<br />ஒரே ஒரு முறை<br />என் வயிற்றில் வாயேன்!<br /><br />ஒவ்வொரு மாதம் <br />தூரம் வரும்போதும்<br />ஒடிந்து போகிறேன்.<br /><br />ஓரிரு நாட்கள் <br />தள்ளிப்போனாலும் - நான்<br />உண்டானதாகவே மகிழ்கிறேன்<br /><br />அம்மாவாக ஆசைப்பட்டே<br />அலுத்துப் போகிறேன்.<br /><br />அவரை அப்பாவாக்கும் <br />முயற்சியில் <br />அடிக்கடி தோற்றுப்போகிறேன்<br /><br />ஆயிரம் முறை<br />கனவில் வரும் கருவே<br />ஒரே ஒரு முறை<br />என் வயிற்றில் வாயேன்<br /><br />உனக்காக..,<br /><br />மாங்காய் கடிக்க <br />ஆசையாய் இருக்கிறது<br /><br />வாந்தி எடுத்து <br />மயங்கி விழ<br />மனது துடிக்கிறது<br /><br />பிடித்ததை எல்லாம் <br />பார்த்துப் பார்த்து<br />ருசியாய்த்தின்ன <br />நாக்கு தவம் கிடக்கிறது<br /><br />வீங்கிய வயிறைத் <br />தூக்கி நடக்க <br />விருப்பமாய் இருக்கிறது<br /><br />மாதம் ஒரு முறை<br />மருத்துவமனை சென்று<br />மலை போல் <br />மருந்து மாத்திரை தின்று<br /><br />கண்ணாடி வளையல் அடுக்கிய<br />ஒரு கையை<br />வயிற்றில் ஏந்தி<br />மறு கையால் இடுப்பைத் தாங்கி<br />அதிராமல் அசைந்து பார்க்க<br />பாதம் ஏங்குகிறது<br /><br />முக்கி முனகி<br />கத்திக் கதறி<br />கண்ணிர் விட்டழுது<br />‘ஆ’ வென்று அலறி...<br />பிரசவ வேதனையில் <br />சுகப்பட <br />அடிக்கடி அழுகிறது<br />ஆழ்மனது<br /><br /><br />உனக்காக<br />இவ்வளவு ஏங்கும்<br />எனக்காக.<br /><br />ஒரே ஒரு முறைமுகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-5185985403420965612010-03-06T04:20:00.000-08:002010-03-06T04:22:40.247-08:00அந்த இருட்டின் <br />ஆழம் பார்க்க எத்தனித்தேன்<br /><br />கவ்வியிருந்த கருமை<br />கண்ணை மறைத்தது<br /><br />நிதானித்த சில நொடிகளில்<br />நிலவு நுழைந்தது <br />ஜன்னல் வழி<br /><br />இறுக்கிய இமை<br />இயல்புக்கு வந்தபோது<br />மங்கலாய் விரிந்தது வெளிச்சம்<br /><br />மெள்ளத் தடவிய காற்றில்<br />மேனி சிலிர்த்தபோது<br /><br />இதமாய் இருந்தது இருட்டு<br /><br />ஆழம் தேடுவதில் <br />அர்த்தமில்லை<br />அனுபவிக்கும்போது...!முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-47593137682522183282010-03-06T03:08:00.000-08:002010-03-06T03:20:25.211-08:00வார்த்தைஇல்லா கவிதைஎதைஎதையோ எழுதிவிட்டு<br />கவிதை என்றேன்<br /><br />கைதட்டியது அரங்கம்<br />மெடல் விழுந்தது கழுத்தில்<br /><br />ஆஸ்தான கவிஞர் <br />அந்தஸ்து கிடைத்ததாக<br />அடிக்கடி வந்தது கனவு<br /><br />“கவிதை எழுதுகிறாளே!<br /> காதலில் விழுந்திருப்பாளோ?”<br />- சந்தேகம் வந்தது வீட்டில்<br /><br />இருபதைத் தாண்டுமுன்னே<br />கட்டிப் போட்டது<br />தாலிச் சங்கிலி<br /><br />நான்கு சுவர்களுக்குள்<br />ஓடிப் போனது <br />ஒரு வருடம்<br /><br />இன்று...<br /><br />இடுப்பு வலியில் <br />உயிர் துடித்து<br />பல்லைக் கடித்து<br />படுக்கையைக் கிழித்து<br />கத்தி ஓய்ந்தபோது<br /><br />மீண்டும் கவிதை வாசனை<br /><br />குவா.. குவா...முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-91591339821411714162010-03-06T03:01:00.000-08:002010-03-06T03:03:50.811-08:00வாழ்க்கைஎன்னை மறந்த நிலையில்<br />எச்சில் வடித்துத் தூங்கிய<br />ஓர் இரவில்<br />எனக்குள் இருந்த <br />‘நீ’யும் நானும்<br />பேசிக் கொண்டோம்<br /><br />‘நலமா?’ என்றாய்<br /><br />‘இருக்கிறேன்’ என்றேன்<br /><br />‘இருப்பது எதற்கு?’ என்றாய்<br /><br />‘இனியொரு நாள் காண’ என்றேன்<br /><br />‘காண்பது எதற்கு?’ என்றாய்<br /><br />‘இன்று போல் வாழ , நாளையையும்’ என்றேன்<br /><br />‘இன்றென்ன வாழ்ந்தாய்?’ என்றாய்<br /><br />“முழுதாய் விடியும் முன் எழுந்தேன்,<br />மூச்சுவாங்க தண்ணீர் இறைத்தேன்,<br />முற்றம் தெளித்துக் கோலமிட்டேன்,<br />வீடு துடைத்தேன்<br />துணிதுவைத்து உலர்த்தி<br />உலர்ந்ததை மடித்தேன்<br />மூன்று வேளை சமைத்தேன்<br />பாத்திரம் துலக்கி அடுப்படி மெழுகினேன்<br />பரிமாறி பசியாறினேன்<br />அங்கொன்றும் இங்கொன்றுமாய்<br />சொல்ல மறந்த வேலைகளும் செய்தேன்” என்றேன்<br /><br />‘வாழ்ந்ததைக் கேட்டேன் –<br />செய்த வேலைகளைச் சொல்கிறாய்<br />இது தான் உன் வாழ்க்கையா?’ என்றாய்<br /><br />‘சுருக்’கென்றிருந்தது எனக்கு<br />‘நீ யார்?’ என்றேன்<br /><br />‘இதுவரை நீ வாழாத வாழ்க்கை’ என்றாய்<br />மறைந்தாய்<br /><br />விடிந்தது – எழுந்தேன்<br />தண்ணீர்க் குடம் தூக்கி<br />கிணற்றடி நடந்தேன்<br /><br />”வாழ்வது எப்படி?” <br />என்று சிந்தித்துக் கொண்டே…!முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-87623785414117767362010-03-05T17:45:00.000-08:002010-03-05T17:46:26.764-08:00ஆலமர உச்சியில்<br />அப்பா<br />அரசமர உச்சியில்<br />அவர்<br /><br />ஆடிக் காற்றில்<br />மரமே விழுந்தாலும் <br />அப்பா விழமாட்டார்<br /><br />ஆயிரம் முறை<br />சுற்றி வந்தாலும்<br />அவர் மரமிறங்க மாட்டார்<br /><br />நல்லவேளை<br />எனக்கு மரமேறத் <br />தெரிந்திருக்கிறது.முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-85996536543832063522010-03-05T17:42:00.000-08:002010-03-05T17:44:28.099-08:00விழித்த கணம்<br />வெறுப்பாய் இருந்தது இன்று<br /><br />சூரியனை முந்திக் கொண்டதை<br />கருவானம் சொன்னது<br /><br />கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லி<br />கொட்டாவி சொன்னது<br /><br />தூக்கமா? விழிப்பா?<br />பட்டிமன்றம் நடத்திப் <br />பரபரத்தது மனது<br /><br />தீர்ப்புக்குக் காத்திருந்த <br />சில நொடிகளில்<br />தூக்கம் <br />தூரம் போனதுமுகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-42001391540412737302010-03-05T17:38:00.000-08:002010-03-05T17:41:11.072-08:00நீண்டுகொண்டே போனது<br />பாதை<br /><br /> இரு மருங்கிலும்<br /> மரங்களுமில்லை<br /> மனிதனுமில்லை<br /><br />நெடியத் தொடர்ந்தது <br />பயணம்<br /><br /> இடையில் எங்கும்<br /> நிறுத்தமும் இல்லை<br /> நிறுத்தவும் இல்லை<br /><br />துரத்திக் கொண்டே வந்தது<br />காலம்<br /><br /> இனியொருமுறை<br /> பிழைப்பதுமில்லை<br /> பிறப்பதுமில்லைமுகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3385382996983083725.post-84114343065112648692010-03-05T17:30:00.000-08:002010-03-05T17:36:50.220-08:00வார்த்தையில் வராத வலி<br />அர்த்தமில்லா வார்த்தைகளை<br />அடுக்கிக் கொண்டே போனது<br /><br />எழுத்தில் பிரசவிக்க<br />சுமந்த கருக்கள் ஏராளம்<br /><br />எழுத்தொன்றே வேலையென்றால்<br />எல்லாம் பிரசவித்திருப்பேன்<br /><br />இழுத்துப் போட்டுச்<br />செய்த வேலையில்<br /> கலைந்தன பாதி<br /><br />இழுத்த இழுப்புக்குச்<br />சென்ற வேகத்தில்<br /> சிதைந்தன மீதி<br /><br />கருக் கலைவும்<br />கருச் சிதைவும்<br />மாறிமாறித் தொடர்ந்ததில்,<br />மரத்துப் போனது மனது<br />மறந்து போனது எழுத்து<br /><br />ஆழப் போய்<br />அலசிப் பார்த்து<br />ஆணிவேர் தொட்டபோது<br />அலட்சியமாய்ச் சிரித்தது<br />ஏதோஒன்று…<br />எனக்குள்ளிருந்து.முகுள்http://www.blogger.com/profile/02225555555658733383noreply@blogger.com0