வார்த்தையில் வராத வலி
அர்த்தமில்லா வார்த்தைகளை
அடுக்கிக் கொண்டே போனது
எழுத்தில் பிரசவிக்க
சுமந்த கருக்கள் ஏராளம்
எழுத்தொன்றே வேலையென்றால்
எல்லாம் பிரசவித்திருப்பேன்
இழுத்துப் போட்டுச்
செய்த வேலையில்
கலைந்தன பாதி
இழுத்த இழுப்புக்குச்
சென்ற வேகத்தில்
சிதைந்தன மீதி
கருக் கலைவும்
கருச் சிதைவும்
மாறிமாறித் தொடர்ந்ததில்,
மரத்துப் போனது மனது
மறந்து போனது எழுத்து
ஆழப் போய்
அலசிப் பார்த்து
ஆணிவேர் தொட்டபோது
அலட்சியமாய்ச் சிரித்தது
ஏதோஒன்று…
எனக்குள்ளிருந்து.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment