Friday, March 5, 2010

வார்த்தையில் வராத வலி
அர்த்தமில்லா வார்த்தைகளை
அடுக்கிக் கொண்டே போனது

எழுத்தில் பிரசவிக்க
சுமந்த கருக்கள் ஏராளம்

எழுத்தொன்றே வேலையென்றால்
எல்லாம் பிரசவித்திருப்பேன்

இழுத்துப் போட்டுச்
செய்த வேலையில்
கலைந்தன பாதி

இழுத்த இழுப்புக்குச்
சென்ற வேகத்தில்
சிதைந்தன மீதி

கருக் கலைவும்
கருச் சிதைவும்
மாறிமாறித் தொடர்ந்ததில்,
மரத்துப் போனது மனது
மறந்து போனது எழுத்து

ஆழப் போய்
அலசிப் பார்த்து
ஆணிவேர் தொட்டபோது
அலட்சியமாய்ச் சிரித்தது
ஏதோஒன்று…
எனக்குள்ளிருந்து.

No comments:

Post a Comment