நீண்டுகொண்டே போனது
பாதை
இரு மருங்கிலும்
மரங்களுமில்லை
மனிதனுமில்லை
நெடியத் தொடர்ந்தது
பயணம்
இடையில் எங்கும்
நிறுத்தமும் இல்லை
நிறுத்தவும் இல்லை
துரத்திக் கொண்டே வந்தது
காலம்
இனியொருமுறை
பிழைப்பதுமில்லை
பிறப்பதுமில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment