Friday, March 5, 2010

நீண்டுகொண்டே போனது
பாதை

இரு மருங்கிலும்
மரங்களுமில்லை
மனிதனுமில்லை

நெடியத் தொடர்ந்தது
பயணம்

இடையில் எங்கும்
நிறுத்தமும் இல்லை
நிறுத்தவும் இல்லை

துரத்திக் கொண்டே வந்தது
காலம்

இனியொருமுறை
பிழைப்பதுமில்லை
பிறப்பதுமில்லை

No comments:

Post a Comment