Friday, March 5, 2010

விழித்த கணம்
வெறுப்பாய் இருந்தது இன்று

சூரியனை முந்திக் கொண்டதை
கருவானம் சொன்னது

கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லி
கொட்டாவி சொன்னது

தூக்கமா? விழிப்பா?
பட்டிமன்றம் நடத்திப்
பரபரத்தது மனது

தீர்ப்புக்குக் காத்திருந்த
சில நொடிகளில்
தூக்கம்
தூரம் போனது

1 comment:

  1. நல்ல கவிதை...

    தினசரி காலையில்,
    இந்த அவஸ்தையை அனுபவிக்கும்
    ஒரு
    தகவல்தொழில்நுட்ப
    பொறியாளன்...

    ReplyDelete