அந்த இருட்டின்
ஆழம் பார்க்க எத்தனித்தேன்
கவ்வியிருந்த கருமை
கண்ணை மறைத்தது
நிதானித்த சில நொடிகளில்
நிலவு நுழைந்தது
ஜன்னல் வழி
இறுக்கிய இமை
இயல்புக்கு வந்தபோது
மங்கலாய் விரிந்தது வெளிச்சம்
மெள்ளத் தடவிய காற்றில்
மேனி சிலிர்த்தபோது
இதமாய் இருந்தது இருட்டு
ஆழம் தேடுவதில்
அர்த்தமில்லை
அனுபவிக்கும்போது...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment