Saturday, March 6, 2010

அந்த இருட்டின்
ஆழம் பார்க்க எத்தனித்தேன்

கவ்வியிருந்த கருமை
கண்ணை மறைத்தது

நிதானித்த சில நொடிகளில்
நிலவு நுழைந்தது
ஜன்னல் வழி

இறுக்கிய இமை
இயல்புக்கு வந்தபோது
மங்கலாய் விரிந்தது வெளிச்சம்

மெள்ளத் தடவிய காற்றில்
மேனி சிலிர்த்தபோது

இதமாய் இருந்தது இருட்டு

ஆழம் தேடுவதில்
அர்த்தமில்லை
அனுபவிக்கும்போது...!

No comments:

Post a Comment